கால்பந்து விளையாடிய போது மயங்கி விழுந்த சென்னை மாநகராட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் திருவிக நகர் பல்லவன் சாலை விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை சக வீரர்கள் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ராஜன். ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.