மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: இன்று அறிக்கை தாக்கல்

63பார்த்தது
மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: இன்று அறிக்கை தாக்கல்
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (செப்.9) சமர்ப்பிக்கப்படுகிறது. 3 நாட்களாக விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இன்று அறிக்கை அளிக்கிறார். அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் மூடநம்பிக்கையை தூண்டும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாகவும் பேசியதாக மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி