பூச்சி மருந்து சாப்பிடுவர் சிகிச்சை பலனின்றி பலி.

75பார்த்தது
பூச்சி மருந்து சாப்பிடுவர் சிகிச்சை பலனின்றி பலி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சி மருந்து சாப்பிட்டவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேல பெருமாள் பட்டியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (40) என்பவர் கடந்த சில வருடங்களாக வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கு அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்நிலையில் தொடர்ந்து அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதால் மனவிரக்தியில் வீட்டில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தினை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

அவரை உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 16ஆம் தேதி சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி