கால்பந்து போட்டியில் ஏ. சி. மேல்நிலைப்பள்ளி சாம்பியன்.

54பார்த்தது
கால்பந்து போட்டியில் ஏ. சி. மேல்நிலைப்பள்ளி சாம்பியன்.
மதுரை பெருங்குடி அருகே நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை அருகே பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி நிறுவனர் நாராயணன் செட்டியார் நினைவு 5வது சுழற் கோப்பை மாநில கால்பந்து போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

இதில் நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டிகளின் இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி அணியினர் 2 0 என்ற கோல் வித்தியாசத்தில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
மதுரை எஸ். பி. ஒ. ஏ. பள்ளி அணி மூன்றாம் இடம் பெற்றனர்.

அதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லுாரி முதல்வர் சந்திரன் பரிசு வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி