திருமங்கலம்: 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டம் தொடக்கம்

60பார்த்தது
திருமங்கலம்: 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டம் தொடக்கம்
மதுரை மாவட்டம் திருமங்கலம்
அருகே கப்பலூர் தொழிற்பேட்டை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில்பேட்டையாக திகழ்கிறது. இதன்மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும்
வகையில் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தின் சார்பில் கப்பலூர் சிட்கோ மற்றும் சுற்றுப்புற பகுதிகளை பசுமை ஆக்கும் வகையில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்திடும் பசுமை திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதிக நவீன சொட்டு நீர் பாசனம் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை சிட்கோ தொழிற்
பேட்டையில் காலியாக உள்ள இடங்களில் கப்பலூர் தொழிலாளர் சங்கம் மற்றும் மதுரை ரோட்டரி கிளப் இணைந்து 10 ஆயிரம் மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டது. இடைவெளியில்லாத அடர் வன காடுகள் அமைத்திடும் திட்டத்தின் துவக்க விழா நேற்று ( ஏப். 5) நடைபெற்றது.

இந்த திட்டத்தின் துவக்க விழாவில் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் கார்த்திக், வைகை அக்ரோ லிமிடெட் சேர்மன் நீதி மோகன், கப்பலூர் தொழிலதிபர் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து புதிய அடர்வன காடுகளை உருவாக்கும் திட்டத்தின் பணிகளை தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி