திருவானைக்காவல் கோயிலில் நால்வர் புறப்பாட்டுடன் கிரிவலம்

55பார்த்தது
திருவானைக்காவல் கோயிலில் நால்வர் புறப்பாட்டுடன் கிரிவலம்
திருச்சி: திருவானைக்காவல் கோயிலில் மாசி மாத பெளர்ணமியையொட்டி நேற்றிரவு (மார்ச் 13) கிரிவலம் வந்தனர். ரிஷபவாகனத்தில் உமையாளுடனான சிவபெருமானுடன், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் காரைக்கால் அம்மையார் ஆகியோரின் உற்சவ சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் கயிலாய வாத்தியங்களுடன் புறப்பட்டு ஐந்தாம் பிரகாரமான திருநீற்றான் மதில் சுவரை சுற்றி வந்தனர். வழிநெடுக உபயங்கள் கண்டருளப்பட்டது. இந்த பெளர்ணமி கிரிவலத்தில் ஏராளமான சிவபக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி