வஞ்சி நகரத்தில் "மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்"

55பார்த்தது
வஞ்சி நகரத்தில் "மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்"
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வஞ்சிநகரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 476 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வஞ்சிநகரம், கச்சிராயன்பட்டி, கம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வஞ்சிநகரம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், உலகநாதன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட கவுன்சிலர் ராஜராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வஞ்சிநகரம் ராஜலெட்சுமி ரவிச்சந்திரன், கச்சிராயன்பட்டி அமிர்தம் ஆண்டிச்சாமி, கம்பூர் கதிரேசன், வஞ்சிநகரம் துணை தலைவர் சந்திரன், மேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லயனல் ராஜ்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என். முத்தையா, வஞ்சிநகரம் திமுக கிளை செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் சின்னக்கருப்பன், வடிவேல், சசிகுமார், கிராமபொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் 476 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

தொடர்புடைய செய்தி