காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் குழந்தை மீட்பு

1896பார்த்தது
மதுரை ரயில்வே நிலைய பகுதியில் சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் யாசகம் பெற்றுவந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சம்பவதினத்தன்று இரவு 11 மணியளவில் மேலமாசி வீதி பகுதியில் சுந்தரி தனது மகன் பாலமுருகன், தனலெட்சுமி, சக்திபிரியா ஆகிய 3 குழந்தைகளுடன் படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணி எழுந்து பார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்திபிரியா (6மாதம்) வை காணவில்லை. குழந்தை காணாமல் போனது குறித்து திடீர் நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் மேலமாசி வீதி பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுமேற்கொண்டு நடத்தியுள்ளனர். அதில் இரு பெண்கள் ஸ்கூட்டியில் வந்து தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்திசென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிசிடிவி காட்சியனை காண்பித்து குழந்தையின் தாயார் சுந்தரியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் இரு பெண்கள் தன்னிடம் வந்து பெண் குழந்தை தந்தால் பணம் தருவதாக கூறி குழந்தையை கேட்டதாகவும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடந்த வாரம் இரு பெண்களும் வந்த ஸ்கூட்டியின் பதிவெண் அடிப்படையில் அவர்களின் வீட்டு முகவரிக்கு சென்று அங்கிருந்து கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தையை மீட்டுள்ளனர். கடத்திய இரு பெண்களையும் திடீர்நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி