அதிகரிக்கும் கோடை வெப்பம் - ஸ்டாலின் நடவடிக்கை

50பார்த்தது
அதிகரிக்கும் கோடை வெப்பம் - ஸ்டாலின் நடவடிக்கை
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிலுள்ள 2000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூலித் தொழிலாளிகள் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி