தெற்கு வாசலில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்.

83பார்த்தது
மதுரை தெற்கு வாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்கு வாசல் பள்ளி வாசல் அருகே இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் பிரதமர் மோடி அவர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மோடி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆர்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.
உடன் மாநகர் செயலாளர் கணேசன், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி