தமிழகத்தில் பாஜக ஏமாற்று கூட்டமாக உள்ளது- கருணாஸ் பேட்டி

73பார்த்தது
மதுரையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் சேது கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் " நான் வறுமையில் தான் இருக்கிறேன், ஆனாலும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு 18 சதவீத ஜி. எஸ். டி வரியை கட்டுகிறேன். ஜி. எஸ். டி வரியை கொண்டு மக்களுக்கு திட்டங்களை செய்யவில்லை.

தொழில் அதிபர்களின் பிரதிநிதியாக அன்னபூர்ணா உரிமையாளர் ஜி. எஸ். டி வரி குறைபாடுகள் குறித்து பேசியுள்ளார். கேள்வி கேட்டதற்காக அன்னபூர்ணா உரிமையாளர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு உள்ளார். ஒட்டுமொத்த வியாபாரிகளையும் பாஜக அவமானப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பாஜக ஏமாற்று கூட்டமாக உள்ளது. பாஜகவின் சதி வலையில் மக்கள் சிக்கி கொண்டனர். எதிர்கால சந்ததிக்கு நீரையும், மண்ணையும் நாம் விட்டு செல்ல வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வரட்டும் பார்க்கலாம், பாமக சாதி கட்சி என்றால் விசிகவும் சாதி கட்சி தான், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனைவரையும் அழைத்திருக்க வேண்டும். பொது சிந்தனையுடன் மது ஒழிப்பு மாநாடு நடத்தவில்லை, அரசியலுக்காக மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார். சாதி, மத அமைப்புகளுக்கு மாநாட்டில் அழைப்பு இல்லை என்றால் சாதி, மத அமைப்புகளுக்கு பொது சிந்தனை இருக்க கூடாதா?

தமிழக அரசியலில் யாரும் தனித்து நிற்க முடியாது, விஜய் எதிர்வரும் தேர்தலில் தனித்து நிற்க முடியாது" என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி