இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு

61பார்த்தது
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அகில இந்திய தலைவர்கள் தமிழக முதல்வர், கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு மாநாட்டின் மாலை வேளையில் திரைப்பட கலைஞர்கள் கொண்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கு நடைபெற உள்ளது. செந்தொண்டர் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற உள்ளது. மாநில உரிமைகளை காப்போம் என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது.

4ஆம் தேதி விஜய் சேதுபதி, சமுத்திர கனி ஆகியோர் பங்கேற்கிறார்கள். மாநாட்டிற்கான அழைப்பை அதிகார பூர்வமாக இன்றைக்கு வெளியிடுகின்றோம்.

அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது ஒரு மினி இந்தியாவை இங்கு இருக்கப் போகிறது. இதை பற்றி பேசுவோம். அகில இந்திய பொதுச் செயலாளர் இந்த மாநாடு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள தொகுதி மறு சீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் சதியை முறியடிக்க கூடிய வகையில் ஒன்று பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் அதற்கான நடவடிக்கைகளை மாநாட்டு மூலம் ஏற்படுத்துவோம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி