மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துற பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை பேச்சியம்மன் கோவில் அருகேயுள்ள தனியார் தென்னந்தோப்பு பகுதியில் மிகத் தாழ்வான நிலையில், கைகளால் தொடுமளவிற்கு கீழே தாழ்ந்து செல்கிறது.
இதனால் இவ்வழியாகச் செல்லும் மனிதர்கள், மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் ஆகியன ஏதேனும் அசம்பாவிதத்திற்கு உள்ளாக நேரிடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பெரிய விபத்து நடந்து உயிர் சேதம் ஏற்படும் முன் உடனடியாக சரிசெய்ய மின்சார வாரியம் முன்வர வேண்டும் என்றும் இதற்கு ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தி உடனடி தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.