சோழவந்தான் தென்கரையில் பழமைவாய்ந்த கோயில் கும்பாபிஷேகம்

78பார்த்தது
சோழவந்தான் தென்கரையில் பழமைவாய்ந்த கோயில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பழமைவாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் இன்று (செப்.,15) காலை 7 மணியிலிருந்து 8. 15 மணிக்குள் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்.
விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் கார்த்திகை செல்வி மற்றும் நாகராஜ், மணிகண்டன், செந்தில் ஜனார்த்தனன், பிரகாஷ் உள்ளிட்ட பணியாளர்கள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி