லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அபார வெற்றி

67பார்த்தது
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது.

தொடர்ந்து லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 8 போட்டியில் 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி