நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி, பல நாட்களாக தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக எந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது உடல் நலம் தேறிய ராகுல் காந்தி, மீண்டும் இன்று முதல் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். இதனை, காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.