தமிழகத்தை உலுக்கிய நால்வர் கொலையில் குற்றவாளிகளுக்கு ஆயுள்

80பார்த்தது
தமிழகத்தை உலுக்கிய நால்வர் கொலையில் குற்றவாளிகளுக்கு ஆயுள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த மோகன்ராஜுக்கு வெங்கடேஷ் என்பவருடன் தகராறு இருந்தது. 2023-ல் மோகன்ராஜ் வீட்டருகே வெங்கடேஷ் மற்றும் நண்பர்கள் மது அருந்தியதை அவர் தட்டி கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மோகன்ராஜ், அவர் தாய் உட்பட நால்வர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் குற்றவாளி என திருப்பூர் நீதிமன்றம் அறிவித்தது. வெங்கடேஷ் உள்ளிட்ட நால்வருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 6 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி