வயநாட்டில் தமிழர்களுக்கு மிரட்டல் விடுப்பு

83பார்த்தது
வயநாட்டில் தமிழர்களுக்கு மிரட்டல் விடுப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாணந்தவாடி தல புழா பகுதியில் துப்பாக்கி ஏந்திய 4 மாவோயிஸ்ட்டுகள் நீங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என கூறி சென்றுள்ளனர். உங்களுக்கு அரசு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எனவே நீங்கள் வாக்களிக்கக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், இதை மீறி தேர்தலில் வாக்களித்தால் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள் என்று மிரட்டி உள்ளனர். கேரளாவில் நாளை மறுநாள் 20 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி