நாடு முழுவதும் வீடு மற்றும் வணிக இடங்களில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிலிண்டரின் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் ஆகிய இயக்கத்தை, சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் ஆய்வு செய்து வந்தனர். இதற்கு ரூ.236 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இனி இந்த சோதனை இலவசமாகவே செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் ரூ.236 கேட்டால் தர வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.