விவிபேட் வழக்கில் அதிகாரிகள் விளக்கம்

61பார்த்தது
விவிபேட் வழக்கில் அதிகாரிகள் விளக்கம்
விவிபேட் வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஈவிஎம், விவிபேட், கட்டுப்பாட்டு கருவி மூன்றுக்கும் தனித்தனி மைக்ரோ சிப் உள்ளது. மூன்றிற்கும் தனித்தனியே மைக்ரோ சிப், புரோகிராம் செய்யப்பட்டு பொருத்தப்படும். தேர்தல் முடிந்த பிறகு மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். விவிபேட் வழக்கில் சில சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதிகள் கூறிய நிலையில் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி