உணவுப் பொருட்கள் வீணாகி விடாமல் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜனை தற்போது உணவுப் பொருட்களில் கலந்து விற்பனை செய்வது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது ஆபத்தான முறை என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. -196 டிகிரி உறைநிலை கொண்ட திரவ நைட்ரஜன், உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது திசுக்களை உறையச் செய்துவிடும். திரவ நைட்ரஜனை குடிப்பதால் இரப்பைக் குழாய் சிதைவுக்கு உள்ளாகி உடனடி உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.