கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பூ திடீர் ஆய்வு.!

76பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவியாக இருக்கும் குஷ்பூ, இன்று (ஜூன் 26) கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரிடம் அவர் காட்டமான கேள்விகள் எழுப்பினார். பெண்கள் கள்ளச்சாராயம் குடிக்கும் அளவிற்கு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்கள் தற்போது கணவன்களை இழந்து இருக்கிறார்கள். இதெல்லாம் காவல்துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி