ஓசூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டம்

74பார்த்தது
ஓசூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டம்
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் எம். ஜி. ஆர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நேற்று செப்-27ம் தேதி ஒசூரில் உழவர் சந்தை, சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் தூய்மைப் பணிகள் மேற்கொண்டனர். இதற்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினர்.

இதில் மாணவர்கள் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். பின்னர் தூய்மைப் பணியின் போது சேகரிக்கப்பட்ட பொருட்கள் முழுவதும் ஓசூர் மாநகராட்சி அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி