பர்கூர்: குழந்தையுடன் இளம்பெண் மாயம்

81பார்த்தது
பர்கூர்: குழந்தையுடன் இளம்பெண் மாயம்
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (35). இவரது மனைவி சுனிதா (30) இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரகளுக்கு 6 மாதத்தில் அனுசியா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்ட்டும் தகராறில் சுனிதா கோபித்துக் கொண்டு, இதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டார். நேற்று முன்தினம் செப்-27ம் தேதி தாய் வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியே சென்ற சுனிதா, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அவரை பல இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி