கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி.. ஓட்டுநர் தப்பி ஓட்டம்

83பார்த்தது
கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி.. ஓட்டுநர் தப்பி ஓட்டம்
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார், விளங்கம்பாடி பகுதியில் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த கார், பைக்கில் சென்றவர்கள் மீதும் மோதியது. அடுத்தடுத்து கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி