தந்தையை காப்பாற்ற சிறுத்தையை அடித்துக் கொன்ற மகள்கள்

68பார்த்தது
தந்தையை காப்பாற்ற சிறுத்தையை அடித்துக் கொன்ற மகள்கள்
உத்திரப் பிரதேச மாநிலம் அமான்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்க்காவல் படைவீரர் ஞான்சிங். இவருக்கு 20, 18 மற்றும் 14 வயதில் 3 மகள்கள் உள்ளனர். ஞான்சிங் வீட்டின் பின்புறத்தில் உள்ள காட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிறுத்தை ஒன்று ஞான்சிங் மீது பாய்ந்து கடித்து குதறியது. அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அவரது மகள்கள் மூன்று பேரும் தந்தையை காப்பாற்ற சிறுத்தையை கைகளால் அடித்துக் கொன்றனர். அது 3 வயதுடைய பெண் சிறுத்தை என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி