ஊத்தங்கரை அருகே பா. ம. க சார்பில் பொதுக்குழு கூட்டம்.

79பார்த்தது
சிங்காரபேட்டை தனியார் திருமண மண்டபத்தில்
பா. ம. க சார்பில் பொதுக்குழு கூட்டம்.

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பொதுக் குழு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்கார பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் சிங்காரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மே 11 அன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு சம்பந்தமாக பர்கூர் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மேகநாதன் தலைமையில் நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் உழவர் பேரியக்க மாநில தலைவருமான வேலுசாமி கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி