கிருஷ்ணகிரி: கிணற்றில் மூழ்கிய விவசாயி..!

2227பார்த்தது
கிருஷ்ணகிரி: கிணற்றில் மூழ்கிய விவசாயி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராயக்கோட்டை அடுத்த சின்ன உள்ளுகுறுக்கை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (42) விவசாயி. இவர் சம்பவம் அன்று மாலை அந்த பகுதியில் தனது விவசாய நிலத்திற்கு சென்றார். விவசாய கிணற்றில் விழுந்து கிடந்த மின் மோட்டார் குழாயை வெளியே எடுப்பதற்காக கோவிந்தன் கிணற்றுக்குள் குதித்தார். நீண்ட நேரமாகியும் அவர் மேலே கிணற்றின் மேல் வராததால் இது குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை தீயணைப்புத்துறையினர் கோவிந்தன் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி