![திரௌபதி அம்மன் ஆலயத்தில் துடப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள். திரௌபதி அம்மன் ஆலயத்தில் துடப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்.](https://media.getlokalapp.com/cache/bf/46/bf46c5fc3e860e291378e3fd1307cf4a.webp)
திரௌபதி அம்மன் ஆலயத்தில் துடப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள துரிஞ்சிப்பட்டி, குட்டூர், மோட்டூர், கீழ்புதூர், உள்ளிட்ட 24 கிராமமக்கள் இணைந்து நடத்திய அக்னி வசந்த உற்சவ திருவிழாவில் துரியோதன் வத செய்யும் படுகளத்தில் 30 அடி நீளத்தில் களி மண்ணால் துரியோதனன் உருவம் செய் செய்யப்பட்டு அங்கு துரியோதனன் வதம் செய்யும் நிகழ்வு நடத்தப்பட்டது. திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளம கிராமமக்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து திருநங்கைகளின் மூலமாக துடப்பத்தினால் ஆண்களும், பெண்களும் தலையில் அடிவாங்கி தங்களது வேண்டுதலை நிறைவேறிக் கொண்டார்கள்.