எம்பி செல்லக்குமார் கிராமங்கள் நேரில் ஆய்வு

68பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி அருகே மிகவும் பின் தாங்கிய பகுதிகளான மூங்கில்பட்டி கிராமத்தில் மக்களின் அடிப்டை வசதிகள் குறித்தது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் நேரில் ஆய்வுப்பணிகளில் மேற்கொண்ட டாக்டர் செல்லக்குமாருக்கு மூங்கில்பட்டி கிராம மக்கள் வ சிறப்பான வரவேற்பு அளித்தனர், பின்னர் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார், அப்போது மூங்கில்பட்டி கிராமம் மிகவும் பின்தாங்கிய பகுதியாக இருப்பதால் யாரும் எந்த அடிப்படை வசதிகள் செய்வது இல்லை இதனால் வந்து சென்ற பேருந்தும் இப்போது வருவது இல்லை இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர், தரமான சாலை வசதியும் இல்லை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையும் சரியான முறையாக வழங்குவது இல்லை குறிப்பாக செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் இதனையடுத்து டாக்டர் செல்லக்குமார் அப்பகுதியில் இயங்கி வரும் அரசுப்பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படைவசதிகள் குறித்து ஆய்வு செய்தார், சம்மந்தப்பட அதிகாரிகள் மூலம்மாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார், இந்த ஆய்வுப்பணியின் போது மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சேகர், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி