திமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை - வி.கே. சசிகலா

69பார்த்தது
திமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை - வி.கே. சசிகலா
திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை என வி.கே. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா தென்காசியில், "திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். திமுக இதே வழியில் ஆட்சி செய்தால் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் கடனை விட்டுச் செல்வார்கள்; எல்லா வகையிலும் வரிகளை அதிகரிக்க செய்வதுதான் திமுக அரசின் சாதனை" என காட்டமாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி