மின் கட்டண உயர்வு- சிபிஎம் போராட்டம் அறிவிப்பு

66பார்த்தது
மின் கட்டண உயர்வு- சிபிஎம் போராட்டம் அறிவிப்பு
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 25-ல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிபிஎம்-யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜூலை 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி