ஒசூரில் குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு

65பார்த்தது
ஒசூர் சின்ன எலசிகிரியை சேர்ந்த 8 பேர் உடல்நலக்குறைவால் ஒசூர் GHல் அனுமதி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி நேரில் நலம் விசாரித்து, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 4வது வார்டு சின்ன எலசகிரி, அம்பேத்கர் காலனி பகுதியில் பெண்கள் உள்ளிட்ட 8பேர் வாந்தி மயக்கம் என ஒசூர் GHல் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலறிந்து

அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுகவினருடன் ஒசூர் GHல் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்தார்.

குடிநீரால் உடல்நல பாதிப்பு எனக்கூறப்படும் நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் காரணத்தை கேட்டறிந்தார். பின்னர் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை வழங்க வலியுறுத்தினார்.

பின்னர் பாலகிருஷ்ணா ரெட்டி, சின்ன எலசகிரி அம்பேத்கர் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சுற்றுப்புற சுகாரத்தை ஆய்வு செய்தார்,
ஓசூர் பகுதி செயலாளர் ராஜு, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், ஓசூர் மாமன்ற உறுப்பினர் குபேரன் என்கின்ற சங்கர், வட்டசெயலாளர்கள் ரகுமான் சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி