4வது முறையாக ஐபிஎல் இறுதி போட்டிக்கு கொல்கத்தா தகுதி

57பார்த்தது
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4வது முறையாக தகுதி பெற்றுள்ளது. முதல் குவாலிபயரில் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 21) மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், 19 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா 13.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. சன்ரைசஸ் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் வெள்ளிக்கிழமை (மே 24) கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி