அரவிந்த் கெஜ்ரிவாலை நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்தது வைத்திருப்பது போல நடத்துகிறார்கள் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், கெஜ்ரிவால் என்ன தவறு செய்தார்? பள்ளிகளை உருவாக்குகிறார். மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளார். இலவச மருத்துவம் கொடுக்கிறார். நான் எப்படி இருக்கிறீர்கள் என்று கெஜ்ரிவாலிடம் கேட்டதற்கு அவர் தன்னைப்பற்றி பேசவில்லை, என்னிடம் பஞ்சாப் பற்றியே கேட்டார் என்று தெரிவித்தார்.