கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லடை அண்ணாநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (60). இவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மது விற்ற ராமலிங்கம் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.