கார் மீது முள் அரவை வாகனம் மோதிய விபத்து

1574பார்த்தது
கார் மீது முள் அரவை வாகனம் மோதிய விபத்து
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புத்தூர் அடுத்த நடுப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் ரமேஷ் (36) இவர் தோகைமலை அருகே மேட்டுப்பட்டியில் பிஆர்பி காந்திராஜன் தென்னந்தோப்பு அருகே தனது காரின் அருகில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த முள் அரவை வாகனம் மோதியதில் கார் முன்பக்கம் சேதமடைந்தது.

மேலும் ரமேஷ் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரமேஷ் அளித்த புகாரி பேரில் விபத்தை ஏற்படுத்திய பாறைக்காலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி