கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் வயது 45.
இதே போல திண்டுக்கல் மாவட்டம், எரியோடு, கள்ளுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் வயது 48.
இவர்கள் இருவரும் ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 4: 30 மணி அளவில் சிந்தாமணி பட்டியலில் இருந்து தரகம்பட்டி செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.
இவர்களது வாகனம் சிந்தாமணிப்பட்டி பாலம் அருகே வந்தபோது, எதிர் திசையில் கடவூர் தாலுக்கா, மைலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் மனோஜ் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், முருகேசன் ஓட்டி சென்ற டூ வீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் முருகேசனுக்கு இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் செயல்படும் சிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக முருகேசன் உடன் பயணித்த முருகன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மனோஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.