கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சின்ன கிணத்துப்பட்டி மற்றும் மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் மது விற்ற கோபால் (53), பொன்னுசாமி (74) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து இன்று (அக்.,1) கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.