தொடர் வழிப்பறி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியீடு

50பார்த்தது
கரூர் அருகே இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து தாக்கி வழிப்பறி செய்து வந்த இருவரை சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சண்முகம் வயது 53 என்பவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில், ஏமூர் அருகே உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் அருகே சென்றபோது, சண்முகத்திடம் லிப்ட் கேட்பதைப் போல நடித்து, வாகனத்தை நிறுத்தி, கத்தியை காட்டி மிரட்டி, தாக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

இதேபோல, வெங்கல்பட்டி திருச்சி பைபாஸ் சாலையில் அருகே இரவு நேரத்தில் தனியாக சென்ற அர்ஜீனன் என்பவரை வழிமறித்தி தாக்கி, இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பி, மர்மநபர்கள் சென்றனர்.

தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறி கொள்ளை, வெள்ளியணை காவல் சரகத்தில் நடைபெற்ற குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய, 100 க்கும் மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிவகங்கை மாவட்டம் கோட்டூர் பெரிய கரை பகுதியைச் சேர்ந்த தென்னரசு, வயது 23, , சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் அச்சாணி பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் வயது: 28 ஆகிய இருவரும் வழிப்பறி செய்து இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி