நடந்து சென்ற சிறுவன் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.

61பார்த்தது
சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம்.


கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சின்னம்பட்டி அருகே உள்ள தாசிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் மகன் கருப்பண்ணன் வயது 14.

இவர் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7 மணி அளவில், ரெட்டிப்பட்டியில் இருந்து பாலவிடுதி செல்லும் சாலையில் உள்ள காமாட்சிபுரம் பஸ் ஸ்டாப் அருகே சாலை ஓரம் நடந்த சென்று கொண்டிருந்தார்.


அப்போது, அதே சாலையில் கடவூர் தாலுக்கா, சேர்வைக்காரன்பட்டி, ஆட்டுக்கார தெருவை சேர்ந்த தினேஷ் வயது 31 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற கருப்பண்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் கருப்பண்ணனுக்கு இடது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்த சம்பவம் அறிந்த கருப்பண்ணனின் தந்தை ஸ்ரீரங்கன் இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தினேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி