காற்றாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

577பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சேங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள மாணிக்கபுரம், கீழடை பகுதிகளில் தனியார் காற்றலை நிறுவனம் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதாலும், விவசாய பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என ஊர் பொதுமக்கள் காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று அப்பகுதி பொதுமக்கள் காற்றாலை அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே சமைத்து உணவருந்தி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி