பல கி.மீ தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

50பார்த்தது
பல கி.மீ தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மக்கள் பலரும் சென்னை திரும்புவதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. செங்கல்பட்டு சிங்கப் பெருமாள் கோவில் பகுதியில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்போது இந்த பகுதியில் நெரிசல் ஏற்படுவதால் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றர்.

தொடர்புடைய செய்தி