டூவீலர்கள் மோதல். தாய், மகன் படுகாயம். காவல்துறை வழக்கு.

51பார்த்தது
டூவீலர்கள் மோதல். தாய், மகன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கூனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவேல் மனைவி மகேஸ்வரி வயது 33. இவரது மகன் ஹரிஹரன் வயது 10.

இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில், ஏப்ரல் 19ஆம் தேதி காலை 8: 20 மணியளவில், கோவை- கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் தென்னிலை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அதே திசையில், அதே சாலையில், கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வெள்ளப்பட்டி அருகே உள்ள வடாம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பூபதி வயது 28 என்பவர், வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், மகேஸ்வரி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்ததில் மகேஸ்வரிக்கு தலை, இடது கால், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது. இதே போல சிறுவன் ஹரிஹரனுக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக இவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர.

இந்த சம்பவம் தொடர்பாக மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பூபதி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி