வீட்டு வேலைக்கு சேர்ந்த 20 நாளில் உயிரிழந்த பணிப்பெண்

66பார்த்தது
வீட்டு வேலைக்கு சேர்ந்த 20 நாளில் உயிரிழந்த பணிப்பெண்
உத்தரபிரதேசத்தின் லக்னோவில் வங்கியில் பணிபுரியும் தம்பதி தங்களின் 4 வயது குழந்தையை கவனித்துக் கொள்ள மோகினி (20) என்ற பெண்ணை பணிக்கு நியமித்தனர். நேற்று மோகினி வேலை செய்த வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தரையில் தண்ணீர் ஊற்றிய போது கால் வழுக்கி கீழே விழுந்ததாக தெரிவித்த போலீசார் பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர். வீட்டு உரிமையாளர்கள் மோகினியை துன்புறுத்தி வந்ததாக அவர் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி