சட்டவிரோத கள் விற்பனை. ஒருவர் கைது. 5 லிட்டர் கள் பறிமுதல்.

59பார்த்தது
சட்டவிரோத கள் விற்பனை. ஒருவர் கைது. 5 லிட்டர் கள் பறிமுதல்.

கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கல்வி விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 8. 30 மணி அளவில்
டி. வெங்கடாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள லோகநாதன் என்பவரது தென்னை மர தோப்பில் சட்டவிரோத கள் விற்பனை நடப்பது தெரிய வந்தது.

இந்த கள் விற்பனையில் ஈடுபட்ட அரவக்குறிச்சி தாலுகா,
சின்னதாராபுரம்,
டி. வெங்கடாபுரம் பகுதியில் உள்ள புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில் வயது 33 என்பவர் என தெரிய வந்தது.


மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 5- லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் செந்தில் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்

தொடர்புடைய செய்தி