குன்னிகாட்டூரில் குடும்பத் தகராறில் பிரிந்து வாழ்ந்தவர் உடல் சிதைந்த நிலையில் மீட்பு.
கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா தலைவா பாளையம் அருகே உள்ள கும்மிக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் வயது 55.
இவரது மனைவி புவனேஸ்வரி வயது 46.
குடும்பத் தகராறு காரணமாக பல வருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
புவனேஸ்வரி மண்மங்கலம் தாலுக்கா, பண்டு தகாரன்புதூர் அருகே வசித்து வந்தார்.
இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி மாலை 4: 45 மணி அளவில், சிதம்பரம் அவரது வீட்டில் இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புவனேஸ்வரிக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது சிதம்பரத்தின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடனே இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடல் சிதைந்த நிலையில் இருந்த சிதம்பரத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.