கொரோனா- 100 கோடி மக்களின் உயிரைக் காத்தவர்களுக்கு வாக்கு-

67பார்த்தது
கொரோனா காலத்தில் 100 கோடி மக்களின் உயிரைக் காத்த பிஜேபி-க்கு வாக்களிக்க வேண்டும்- செந்தில்நாதன் வேண்டுகோள்.


கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதன் இன்று கரூர் மாவட்ட எல்லை கிராமமான பெரிய மஞ்சுவலி, ஆண்டிப்பட்டி கோட்டை, பூமதேவம், குரும்பபட்டி, இனங்கனூர், வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுடன் வேட்பாளர் செந்தில்நாதன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பெண்கள், வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வரவேற்பளிக்கும் வகையில் ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசிய வேட்பாளர் செந்தில்நாதன், உலகம் போற்றும் உத்தமத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா காலத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்கிய பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறி வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு அங்கு கூடி இருந்த பொதுமக்கள், வரவேற்பு தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி