மோடி மீது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு

76பார்த்தது
மோடி மீது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு
இந்தியர்களின் சொத்துக்கள் அனைத்தும் மோடியின் நண்பர்களிடம் உள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகரித்துள்ளது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் ஒப்பிடும்போது 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார். 70 கோடி இந்தியர்களின் செல்வம் மோடிஜியின் நண்பர்களான முதல் 22 பணக்காரர்களிடம் உள்ளது என்றார். மோடி அரசு அமைந்து 9 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி