நெல்லை கவுன்சிலர் ராஜினாமா: வெளியான கடிதம்

75பார்த்தது
நெல்லை கவுன்சிலர் ராஜினாமா: வெளியான கடிதம்
நெல்லை மாநகராட்சியில் அதிகாரிகள் ஜாதி பாகுபாடு காட்டுவதால் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கவுன்சிலர் மிரட்டல் விடுத்துள்ளார். 36வது வார்டு பெண் கவுன்சிலர் சின்னதாய் எழுதியுள்ள கடிதத்தில், அருந்ததியர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் தான் மிகவும் அவமதிக்கப்படுவதாகவும், அருந்ததியர் என்பதால் தனது வார்டில் திட்டமிட்டு குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி அதை வாட்ஸ்அப் மூலம் மேயர் மற்றும் குழுக்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.